search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் பணம் கொள்ளை"

    பாப்பாரப்பட்டி அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த நகை மற்றும் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பென்னாகரம் செல்லும் மெயின் ரோட்டில் தொட்லாம்பட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக ராமன் உள்ளார். 

    இந்த நிலையில், நேற்று காலை 5 மணிக்கு வழக்கம்போல் கோவிலில் திறப்பதற்காக ராமன் வந்தார். அப்போது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

    உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தையும், அம்மன் கழுத்தில் இருந்த, கால் பவுன் தங்க தாலியையும் கொள்ளை அடிக்கப்பட்டதும் தெரியவந்தது.

    இதுகுறித்து பூசாரி ராமன், பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லித்தோப்பில் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    புதுச்சேரி:

    நெல்லித்தோப்பு வேல் முருகன் நகர் 2-வது குறுக்கு தெருவில் சாலை முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் தினமும் தரிசனம் செய்து உண்டியல் காணிக்கை பணம் செலுத்துவது வழக்கம்.

    நேற்று சங்கடகர சதுர்த்தியையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    சாமி தரிசனத்துக்கு பின்னர் கோவில் அர்ச்சகர் ராஜி இரவு 10 மணிக்கு கோவிலை பூட்டி சென்றார். இன்று காலை 6 மணிக்கு வழக்கம் போல் பூஜை செய்ய அர்ச்சகர் ராஜி கோவிலுக்கு வந்தார்.

    அப்போது கோவிலின் 2 கதவு பூட்டுகளும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. காணிக்கை பணம் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

    நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து உண்டியல் காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    கடந்த 6 மாதமாக உண்டியல் திறக்கப்படவில்லை. எனவே, உண்டியலில் சுமார் ரூ.60 ஆயிரம் வரை காணிக்கை பணம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறனும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் அருகில் உள்ள வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து உண்டியல் கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருநாவலூர் அருகே பராசக்தி கோவில் உண்டியல்களை உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருநாவலூர்:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கெடிலம் கூட்ரோட்டில் விழுப்புரம் சாலையில் பராசக்தி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2 உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த உண்டியல்களில் காணிக்கைகளை செலுத்துவார்கள். நேற்று இரவு பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டி விட்டு பூசாரி வீட்டுக்கு சென்று விட்டார்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம மனிதர்கள் கோவில் முன்பு இருந்த கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் அங்கிருந்த 2 உண்டியல்களையும் அவர்கள் கடப்பாரையால் உடைத்தனர். அதில் இருந்த பணத்தை ஒரு பையில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கோவிலின் உண்டியல்கள் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கோவில் நிர்வாகி சூரியமூர்த்தி திருநாவலூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர்கள் பரணிதரன், நந்தகோபால் ஆகியோர் அங்கு விரைந்து சென்று கொள்ளை போன கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். உண்டியல்களில் ஆயிரக்கணக்கான ரூபாய் இருந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது.

    உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    கொருக்குப்பேட்டையில் கோவில் ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.1½ லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை பசுவன் தெருவில், ராமலிங்க சவுடேஸ்வரி தேவி கோவில் உள்ளது.

    இந்த கோவிலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பொது மக்களிடமும், முக்கிய பிரமுகர்களிடமும் நன்கொடை வசூலிக்கப்பட்டது.

    இதுவரை கிடைத்த பணத்தை கோவில் கேஷியர்கள் சத்திரபதி, கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நேற்று இரவு 7.30 மணி அளவில் எண்ணி சரி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஹெல்மெட் அணிந்த 2 பேர் அங்கு வந்தனர்.

    திடீர் என்று அவர்கள் 2 பேரும் கத்தியை காட்டி, கோவில் கேஷியர்களிடம் இருந்த பணம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்துக் கொண்டனர். பின்னர் அவர்களை கட்டிப் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கோவிலுக்கு சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். கொள்ளையர்களின் கைரேகைகளையும் பதிவு செய்தனர்.

    பணத்தை பறிகொடுத்த கோவில் கேஷியர்கள் சந்திரபதி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். தெரிந்தவர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

    தப்பி ஓடிய கொள்ளையர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

    ×